தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி -
மனம் வாடித்துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -
நரை கூடிக் கிழப்பருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -
பல வேடிக்கை மனிதரைப்போலே -
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
28 January, 2010
Subscribe to:
Posts (Atom)