"அம்மா... அப்பா..."
"புள்ள வந்தானா?"
"ஆமா..."
"புது வண்டியப் பாத்தானா?"
"ஆமா, ஆமா..."
"என்ன சொன்னான்?..."
எதுவும் சொல்லாமல்
ஏறிட்டுச் சிரித்தாள்...
"சொல்லித் தொலையுங்கலேன்"
"இன்னும் நல்லதாக்
கிடைக்கலையான்னு சொன்னான்"
உரக்கச் சிரித்துவிட்டு
ஓய்ந்தவர் சொன்னார்,
"உன்னை
முதலில் பாத்தப்ப
என்ன சொன்னேனோ
அதையேதான் அவனும்
அப்படியே சொல்லியிருக்கான்..."
அங்கே,
கோபத்தைக் காண்பிக்க
முயற்சித்துத் தோற்றவளாய்,
குலுங்கிச் சிரித்தாள் அம்மா...
18 February, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment