கதகதப்பாய்.....
சொகுசாய்......
உறங்கிக்கொண்டு இருந்தேன்
கருவறையில்......
மூன்று மாதம் ஆனது ...
ஆஸ்பத்ரி சென்றாள் அம்மா
'பெண் என்றால் கலைத்து விடு "
என்ற வழக்கமான கட்டளையோடு
ஒளிச்சிதறல்களின் துகள்களில்
அதிர்ந்தேன் நான்
வெளிச்சத்தில் என் உருவம்
பார்த்த அவள்
விக்கித்து போய் நின்றாள்
அழக்கூட முடியாமல் ....
பாவம் அவள் .....
.அவளுக்காக .....
உள்ளுக்குள் கரைந்து
உதிரமாய் வெளியேறினேன் நான்
எனக்காக ஏங்கும் நாள் வரும் போது
வருகிறேன் என்று...
29 March, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment