30 July, 2010

ரசிகன்

நினைவுகளை காலம் கடத்திப்போனாலும்
 இன்னமும் உன் பெயர் கொண்ட 
எதையேனும் பார்க்கும்போதோ, கேட்கும்போதோ, 
மறவாமல் ரசிக்கத்தான் செய்கிறேன் 
உன் ரசிகனாய்....!

25 July, 2010

அழகே

உன் அழகே
அழகான உன்
சிந்தனைதான்
தெரியுமா?

அலுக்காத கேள்வி

எத்தனை முறை
நீ கேட்டாலும் பதில்
சொல்ல அலுக்காத
கேள்வி ...
என்னை அவ்வளவு
பிடிச்சுருக்காடா..??

எப்படி காதலித்துத் தொலைத்தேன் ??

உன்னையெல்லாம்
எப்படி காதலித்துத்
தொலைத்தேன் ??
பாழாய்ப்போன மனம்
உன் பின்னே
ஒரு நாய்க்குட்டியைப் போல்
ஓடி என் உயிரை எடுக்கிறது...

நினைவுகள்

எப்போதெல்லாம் என்
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறாய்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?

நீதான்

ஏண்டா இப்படிக் காதலிச்சு என்
உயிரை வாங்கற..?
என அழகாக நீ
அலுத்துக்கொள்ளும்போது
என் உயிரை வாங்குவது
என்னவோ நீதான்...

ஓ...........

உன் முகம்
கண்டால் மட்டும்
ஏனடி நான் இப்படி
உளருகிறேன்?


ஓ.; இவை
உன் கண்களா?
இல்லை
கண்”கள் ”ளா?

நடக்கும்

இது நடக்குமா?
கேற்க்கிறாய்.
நான்
உன்னைக் காதலிப்பது
மட்டும் நடக்கும்
என்றா நினைத்திருந்தேன்?

என் கன்னுக்குட்டி

உன் கவிதை நன்றாகத்தான்
 இருக்குடா என்கிறாய்,
  அதை உன் கண்களில் 
     இருந்துதான் கற்றுக்கொண்டேன்
       என்றால் நம்புவாயா?
         என் கன்னுக்குட்டி

கவிதை

எனக்கு கவிதை சொல்லத்
    தெரியாது என்கிறாய்...
என்னை திட்டுவதாய் நினைத்துக்கொண்டு 
    நீ சொல்பவற்றை எந்த வகையில் 

       சேர்ப்பது நான்?

தேவை

உயிர் வாழ ஆக்ஸிஜன் 
   தேவை என்கிறார்கள்.
நான் ”நிஜமாய்” வாழ 
  நிச்சயமாய்
     நீ தேவை.....

தப்பு

எல்லாத்தையும் தப்புத்தப்பா செஞ்சு 
   வைக்கறதே உனக்கு வேலையா போச்சு....
உன்மீதான என்காதலின் வெளிப்பாடுகளை 
   ஷார்ட் டேர்ம் மெம்மரியிலும்,


நான் செய்த சிறு சிறு தவறுகளை 
   லாங் டேர்ம் மெம்மரிலும் 
      போட்டு வைத்திருக்கிறாயே?

அழகு

கண்ணே!!!
    கவிதைக்கு மட்டுமல்ல 
காதலுக்கும்
    பொய் அழகுதான்...

ஏய்
    நீ ரொம்ப
       அழகாயிருக்கே...........